கோத்தாபயவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்- மாவை

senathirasa
senathirasa

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கோத்தாபய ராஜபக்‌ஷவுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நாட்டின் தலைவர் என்ற ரீதியில் கோத்த்தாபய ராஜபக்‌ஷ ஏற்றுக் கொண்டு அவை தொடர்பிலும் ஆராய வேண்டும்.

இவ்விடயம் குறித்து அவர் எம்மோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைத்தால் அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

எதிர்வரும் தினங்களில் இது குறித்து ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.