பிரான்சில் மீட்புப்படை வீரர்கள் மூவர் பலி

france
france

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற கனமழையினால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ரேடார் செயலிழந்ததால், கீழே விழுந்து நொறுங்கியதில் 3 மீட்புப்படை வீரர்கள் பலியாகினர்.

இதையடுத்து இடம்பெற்ற தேடுதல் பணியில் ஹெலிகொப்டர் நொறுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் சென்ற மூன்று வீரர்களும் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.