சிகரெட் கடத்தியவர் கைது

7 s
7 s

சட்டவிரோதமாக இலங்கைக்கு சிகரெட் கொண்டு வந்த நபரொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (08) அதிகாலை 5.30 மணியளவில், FZ 548 எனும் விமானத்தில் துபாயிலிருந்து வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் லால் வீரகோன் தெரிவித்துள்ளார்.

இதன்போது, குறித்த நபரிடமிருந்து 91 கார்ட்டன் சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதன் பெறுமதி 10 இலட்சத்து 92 ஆயிரம் (ரூ. 1,092,000) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றை அவரது பயணப் பொதியில் மறைத்து வைத்து எடுத்துவர முயன்ற நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பிலான விசாரணைகள், சுங்கத்திணைக்கள அதிகாரிகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.