அரசியல்கைதிகள் விடுவிக்கப்படவில்லை

sakthivel
sakthivel

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள ஏழு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற செய்திகள் உண்மை இல்லை என அரசியல் கைதிகள் தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை ம. சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இதுவரை எதுவிதமான அறிவுறுத்தல்களை வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் உள்ள 89 அரசியல் கைதிகளில் நான் அறிய எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என அவர் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார். ஆயினும் 2015 சுதந்திர தினத்தன்று ஒரு அரசியல் கைதி மாத்திரம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.