இரண்டரை மாத பாலகனை நள்ளிரவு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் துன்னாலையில் இடம்பெற்றுள்ளது.
பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல் பாலகனை காணவில்லை என்று தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இன்று காலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பாலகனின் சடலம் மந்திகை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று விசாரணையின் பின்னரே உண்மை துலங்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெல்லியடிப் பொலிஸார், தந்தையையும் தாயாரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.