மாநகர சபையின் சட்டத்தை மீறியவர் கைது

batti
batti

மட்டக்களப்பில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலையில் காரணமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர சபையின் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதிக காலமாக பராமரிப்பாரற்று காணப்படும் காணிகளை சுத்தப்படுத்துவதற்கான கடிதம் மாநகர சபையினால் அனுப்பி வைக்கப்பட்ட போதும் குறித்த கடிதம் தொடர்பில் அலட்சியம் செய்தது மட்டுமல்லாது மாநகர சட்டத்தினை புறக்கணிக்கும் வகையில் நடந்து கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் வெள்ளநீர் வடிந்தோடலுக்கான செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.