தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும் ஏனைய இரண்டு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிற்குமிடையிலான விசேட சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.
தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளில் ஏனைய கட்சிகள் அதிருப்தியடைந்துள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சி அரசுடன் இரகசிய உறவைப் பேணி அனுகூலங்களை பெற்றுக்கொள்வதாகவும், அரசியலமைப்பு விவகாரத்தில் தவறாக மக்களை வழிநடத்தியது உள்ளிட்ட பல விவகாரங்களில் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் சம்பந்தனிற்கும் இரு பங்காளி கட்சிகளிற்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தநிலையில் இது தொடர்பிலான விரிவான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.