தனியார் கட்டடங்களில் இயங்கிவரும் அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு உரித்தான கட்டடங்களுக்கு மாற்றுமாறு பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலதிக செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சில கட்டடங்களின் ஒப்பந்தங்கள் நிறைவுபெறாதமையால் அவை தொடர்ந்தும் அரச நிறுவனங்களாக முன்னெடுக்கப்படும் என பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.