தெருவில் வீசப்படும் சிசு- நெஞ்சு பொறுக்குதில்லையே!

318
318

கருவில் வளர வேண்டிய சிசு தெருவில் வீசப்படும் அவலம் நெஞ்சு பொறுக்குதில்லையே! ஒவ்வொரு மருத்துவமனையையும் கண்காணிப்பது அவசியம்!!

புத்தளம் – குருணாகல் பிரதான வீதியின் 4ம் கட்டைப் பகுதியில் கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அநாதரவாக வீசப்பட்ட பிறந்து ஒரு நாளேயான சிசு மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சிசு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது .

காட்டில் விறகு சேகரிக்க சென்றவர் துணியால் சுற்றப்பட்ட பொருளை பிரித்த பொழுது சிசு ஒன்று முட்புதர் கீறல்களுடன் காணப்பட்டதை தொடர்ந்து சுவசிரி 1990அம்பிலன்ஸ் வண்டிற்கு அழைப்பினை ஏற்படுத்தி சிசுவை உயிர்காக்கும் நடவடிக்கைக்கு உறுதுணையாக செயற்பட்டுள்ளார்,

இளம் தலைமுறையினர் இடையே போதிய விழிப்புணர்வு இல்லாதது; தகாத உறவால் கருவுறுதல் உள்ளிட்ட காரணங்களால், ரோடு, சாக்கடை கால்வாய்களில்,பயன்பாடுகளற்ற காணிகள்  இறந்த “சிசு’க்களின் சடலங்களை வீசுவது, இலங்கையில் அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும், ஐந்து “சிசு’ உயிரோடு  மீட்கப்பட்டுள்ளது, பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.

சாக்கடை கால்வாய், குப்பைத்தொட்டி, ரோட்டோரங்களில் துணி சுற்றிய நிலையில் ஏதேனும் காணப்பட்டால், அது சிசுவாக இருக்கும் என சந்தேகப்படும் அளவுக்கு, இலங்கையில் , சிசு சடலங்களை வீசியெறியும் போக்கு அதிகரித்துள்ளது.

 கருவில், 10 மாதம் வளர வேண்டிய சிசு, குறைமாதத்தில் வெளியே எடுக்கப்பட்டு, தெருவிலும், சாக்கடைகளிலும் வீசப்படுகிறது. சிலர், தகாத உறவால் கருவுற்று, அவற்றை வெளியே தெரிவிக்காமல், “அபார்சன்’ செய்கின்றனர். இதற்கு, சில டாக்டர்கள், முறைகேடாக இயங்கும் சில கிளீனிக், ஆயிரக்கணக்கில் கிடைக்கும் தொகைக்காக, உடந்தையாக உள்ளனர். கருப்பையில் இருந்து எடுக்கப்படும் சிசுவை, முறையாக டாக்டர்கள் அகற்றாமல், அவர்களிடமே கொடுத்து, எங்காவது வீசிச்செல்லும்படி கூறி விடுகின்றனர். மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில், இதுபோல், “சிசு’ வீசும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கருவுறுவதற்கான உடல் தகுதியின்றி கருத்தரித்தல், பஸ் பயணம், அதிக வேலை, உடல் உஷ்ணம் போன்ற காரணங்களால், சில பெண்களுக்கு கரு கலைந்து விடுகிறது. இதுபோன்ற பெண்கள் முறையாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே, உடல் நலம் சரியாகும். எனவே, இளம்பெண்களுக்கு, இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
முறைகேடாக “அபார்சன்’ உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் டொக்டர்கள், போலி கிளீனிக், மருத்துவமனைகளை கண்காணித்து, அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிறுவனம் , கல்வி நிறுவனங்களில் உள்ள பெண்களுக்கு, பாலின உறவு, பழக்க வழக்கம் குறித்து, விழிப்புணர்வு, ஆலோசனை வழங்க வேண்டியது அவசியமாகியுள்ளது.கண்காணிப்பு அவசியம்

சில நிறுவனங்கள் ,பல்கலைக்கழகங்கள்  ஆண், பெண் ஒரே இடத்தில் அதிக நேரம் பணியாற்றுவது, குடும்பத்தினருடன் இல்லாமல், தனியாக வசிக்கும் இளம் வயதினர், முறையற்ற செயல்களால் உருவாகும் கருவை, இவ்வாறு சிதைக்கின்றனர். மருத்துவமனைகள், பதிவு பெற்ற டாக்டர்களிடம் வரும்போது, கணவன், மனைவியாக வந்தால் மட்டுமே, கர்ப்ப பரிசோதனை, “அபார்ஷன்’ ஆகியவை செய்ய முடியும்; இதற்கு, பல கட்டுப்பாடுகள் உள்ளன.

தம்பதி மற்றும் இரு தரப்பை சேர்ந்த குடும்பத்தினரில், சிலராவது வருவர். அவர்கள், “அபார்ஷன்’ செய்தாலும், வாரிசாக நினைத்து, முறையாக சடங்கு செய்வர். தகாக உறவு போன்றவற்றால் உருவாகும் கருவே, இவ்வாறு குறை மாதத்தில் அழிக்கப்படுகிறது. முறைகேடாக மற்றும், பணமே குறிக்கோளாக கொண்ட சில டாக்டர்கள் சிலர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து கண்காணிப்பு அவசியம். பாதுகாப்பான பழக்க வழக்கம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகள், இலங்கை மருத்துவ சங்கத்தி லுள்ள டாக்டர்களுக்கு, இதுகுறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்,

திருமலை கண்மணி முகநூல் தளம்