இங்கிலாந்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பழமைவாத கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பொரிஸ் ஜோன்சனிற்கு இந்திய பிரதமர் டுவிட்டரினூடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-பிரித்தானியாவிற்கிடையிலான நெருக்கமான உறவுகளுக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருப்பதாகவும் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.