சிசுவை கொலை செய்த தாய்!!

trinco 1
trinco 1

திருகோணமலையில் தான் பெற்ற சிசுவை கொலை செய்து புதைத்த தாயை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை விளாங்குளம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ரவி சங்கர் நிரஞ்சலா என்பவர் தன்னுடன் பழகிய நபருடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் குறை மாதத்தில் பிள்ளை பிறந்ததாகவும் இதேவேளை ஊசி மூலமாக குறைமாதத்தில் சிசுவை வெளியேற்றி சட்டவிரோதமாக புதைத்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.

திருமணமாகி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த நிலையில் தனது கணவரை விட்டு தனிமையாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.