குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு வற்புறுத்த முடியாது

mamtha
mamtha

பாரதிய ஜனதா கட்சியால் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்படி எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது என மேற்குவங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை இந்த மாநிலத்தில் உள்ள ஒரு நபர் கூட நாட்டை விட்டு வெளியேறமாட்டார்கள். குடியுரிமை சட்டம் இந்தியாவை பிரித்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.