கைதான மாணவர்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

chennai
chennai

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சேப்பாக்கத்தில் கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மெரினா கடற்கரை சாலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கைதான இரு மாணவர்களை விடுவிக்கக்கோரியும் பொலிஸாரின் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு குறித்த இடத்திற்கு அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.