சமீபநாட்களாக வடக்கில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதுதொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
கோணாவில் யூனியன்குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் கார்விழி என்ற கோணாவில் பாடசாலை மாணவியே தற்கொலை செய்துகொண்டவராவார்
தனக்கு வாழ பிடிக்கவில்லை என தெரிவித்து குறித்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமீபகாலமாக பல்கலைக்கழகமாணவர்கள் சிலர் உட்பட தற்கொலைக்கு உட்படுவோர் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளதோடு இதனை கட்டுப்படுத்துவதுதொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோருகின்ற்றனர்.