தெற்கிலும் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு !

1 ce
1 ce

இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெற்கிலும் சில மாவட்டங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, பதுளை, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின்போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தீர்மானம் தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மருத்துவ சிகிச்சைக்காக நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் நாடு திரும்பியவுடன் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.