தவறிய அழைப்புக்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவிப்பு

missed call
missed call

இனந்தெரியாத வெளிநாட்டு இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் இனந்தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் வெளிநாட்டு தவறிய அழைப்புக்களிற்கு, மீள் அழைப்போ, குறுந்தகவலோ அனுப்ப வேண்டாமெனவும் அவ்வாறான அழைப்புக்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் 1700 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.