பணத்தை பறிகொடுத்ததால் பாட்டு பாடிய பிரபல பாடகி!

625.0.560.350.160.300.053.800.668.160.90 1
625.0.560.350.160.300.053.800.668.160.90 1

பாரீஸ் சென்றிருந்த ஒரு பிரபல பொப்பிசைப் பாடகி, அனஸ்தஸிஜ ரேனாடோவிக் பர்ஸை பறி கொடுத்ததால் டாக்சிக்கு பணம் இல்லாததால் பணத்துக்கு பதிலாக பாட்டுப் பாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தனது தோழியுடன் பாரீஸுக்கு சென்றிருந்தபோது, அவரது பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது.

அறைக்கு திரும்ப வழியில்லாத இரு இளம்பெண்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர்.

பின்னர் டாக்சி ஒன்றின் சாரதியிடம், தான் ஒரு பொப்பிசைப் பாடகி என்று கூறி தங்களை ஹோட்டல் அறையில் கொண்டு விடுமாறு கேட்டுக்கொண்டு, அதற்கு பதிலாக வழியெல்லாம் தான் பாடல் பாடியபடியே வருவதாக கூற, அந்த சாரதியும் ஓப்புக்கொண்டுள்ளார்.

அப்படியே ஹோட்டலுக்கு சென்று சேர்ந்ததும், பணத்தை எடுத்துக்கொண்டுவந்து டாக்சி சாரதியிடம் கொடுக்க, அவர் பணம் வாங்க மறுத்துள்ளார். சாரதியின் உதவும் மனப்பான்மை தான் மதிப்பதாக அனஸ்தீஸியா கூறியுள்ளார்.