சபை முதல்வராக தினேஷ் குணவர்தன தெரிவு

dines gunawardana
dines gunawardana

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றின் சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ ஆளும் கட்சி பிரதம கொரடாவாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை நாளை (03) நாடாளுமன்றம் 3ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ளது.

இதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சபை கூடவுள்ளதால் அவர் அரசின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.