திருகோணமலை கடற்கரை முன்றலில் 2006ம் ஆண்டு கொல்லப்பட்ட 5 மாணவர்களையும் நினைவுகூர்ந்து இன்று (02) அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருகோணமலை காந்தி சுற்றுவட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இது நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற 6.35 மணிக்கு வழமை போன்று கொல்லப்பட்ட மாணவர்களது நண்பர்களாகவும் உறவினர்களாலும் நினைவேந்தல் நிகழ்த்தப்பட்டது.