2020 ஆம் ஆண்டில் உலகில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு பொருத்தமான 20 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
சி.என்.என் ரவல் இணையத்தளத்தினால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலாவை மேற்கொள்வதற்கு வரலாற்றுக்கு உரிமை கோரும் அநுராதபுரம், பொலனறுவை போன்ற இடங்களும் கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டி எசல பெரஹர போன்ற இடங்களும் முக்கிமானதாக சி.என்.என் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேபோன்று மின்னேரிய உள்ளிட்ட பூங்காக்கள் மற்றும் இலங்கையைச் சூழவுள்ள கரையோரம் தொடர்பாகவும் சி.என்.என் இணையத்தம் சுற்றுலாப்பயணிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.