இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு – 23 பேர் பலி

indonesia
indonesia

இந்தோனேசியாவில் பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மழை தொர்பான விபத்துக்களில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர்.

பலரைக் காணவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என பேரிடர் மேலாண்மை முகமை எச்சரித்துள்ளது.

சுமார் 10 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மின்விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஜகார்த்தாவின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தண்ணீர் சூழ்ந்ததால் சில ரெயில் பாதைகளும், விமான நிலையங்களும் மூடப்பட்டன.