யாழ் செம்மணியில் நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் முன்னெடுப்பு!

IMG 6779
IMG 6779

நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்டமான வகையில் நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.
அதற்கமையவே இந்த வளைவு அமைக்கும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த நல்லூர் வளைவில் கலை கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையில் சிற்பங்கள் நிறுவப்பட்டு மிக விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளது.

பிற மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் மக்களை வரவேற்கும் யாழ் விளைவுவுக்கு அண்மையிலேயே குறித்த நல்லூர் வளைவு அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நல்லூர் வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுகின்றமையினால் ஏற்படுகின்ற வாகன நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.