மகளின் திருமணத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

poojitha
poojitha

சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தனது மகளின் திருமண வைபவத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு சந்தேகநபரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அனுமதி கோரியிருந்தார்.

எந்தவொரு சந்தேகநபருக்கும், சிறைக் கைதிக்கும் தமது பெற்றோரின் மரணச் சடங்குகள் தவிர்ந்த எந்தவொரு நிகழ்விலும் அனுமதிப்பதற்கு சிறைச்சாலைகள் சட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லையென சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.