ஆளுநரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு – செல்வம் எம்.பி

selvam1
selvam1

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட அனைவரும் ஆளுநரிற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்:

“வடக்கு மாகாண ஆளுநரின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டமையிட்டு கர்வமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

எங்களுடைய புதிய ஆளுநர் எங்களுடைய மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் வடமாகாணத்தில் பெண் ஆளுநராக தெரிவு செய்யப்பட்டமையைக் கொண்டு அதனைக் கூறினேன்.

எங்கள் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வருவது என்பது வரவேற்கத்தக்க விடயம். அவரை இந்த நேரத்தில் பாராட்டுவதுடன் நாங்களும் உங்களுடன் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.

மாகாண மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். யுத்தம் முடிவுற்ற நிலையில் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு துணிச்சலும் சேவை உணர்வுடனும் செயலாற்றியவர்.

எங்கள் மக்களுக்குத் தேவையான விடயங்களை சிறப்பாக செய்ய வேண்டும். நீஞ்கள் பல துறைகளிலுமே சிறப்பாக செயற்பட்டுள்ளீர்கள். அத்தகைய சிறப்பான பணிகளும் இந்த மாகாணத்திற்கு கிடைக்கவேண்டும்” என தெரிவித்தார்.