மாணவி துஷ்பிரயோகம் – ரதன் கட்சியில் இருந்து இடைநிறுத்தம்

m.rathan
m.rathan

மாணவியொருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.எம்.ரதனை தமது கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டக் கிளைத் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண அமைச்சருமான ப.சத்தியலிங்கம் இன்று (11) இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கருத்து தெரிக்கையில்,

“வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலய ஆசிரியரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.எம்.ரதன் அங்கு கல்வி பயிலும் மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் வவுனியா மாவட்ட கிளை ஒழுக்காற்றுக் விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டு என தீர்மானித்துள்ளது.

விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று முடியும் வரை அவர் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் இடைநிறுத்துவதாக கட்சி தீர்மானித்துள்ளது” என தெரிவித்தார்.