நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை !

1564284997 rainy weather 2
1564284997 rainy weather 2

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி,மாத்தறை,கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று(11) மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணை்ககளம் தெரிவித்துள்ளது.

அதேபோல, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை மற்றும் மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறித்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழையுடனான காலநிலையை எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.