தன்னிலை விளக்கமளிக்கும் தர்ஷானந்த் !!

8 fg
8 fg

மேலதிக செய்திகள்..

ஒளவையார் எழுதிய மூதுரையில் உள்ள பாடல் ஒன்றை எனது முகநூலில் எழுதியிருந்தேன் அதனை சபையில் உள்ள சில உறுப்பினர்கள் தங்கள் சுயநலனுக்காக பயன்படுத்தி நான் சாதியை குறித்து எழுதியதாகவும் பேசியதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் தனக்கு அபகீர்த்தி உண்டாகியிருப்பதாக யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்ஷானந்த் கூறியுள்ளார்.

ஒருவருடைய கல்வி அறிவை குறித்தே நான் முகநூலில் பதிவிட்டேன். தனிநபரை அல்லது சாதியை குறித்து நான் எழுதவில்லை.

மக்கள் சிலரும் அதனை தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர், கட்சி என்னிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதனை நான் எழுத்திலும், நேரிலும் வழங்கவுள்ளேன் . மக்களுக்கும் இது தொடர்பில் விளக்கம் வழங்கவுள்ளேன் என இன்று காலை யாழ் ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தெரிவித்தார்.

தன்னிலை விளக்கமளிக்கும் தர்ஷானந்த் !!

யாழ் மாநகரசபையில் உறுப்பினர்கள் நேற்று மிக மோசமான வார்த்தை பிரயோகங்களை முன்வைத்து மோதிக்கொண்ட விவகாரத்தில், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) அமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப .தர்ஷானந்த் இன்று யாழ் ஊடக மையத்தில் தன்னிலை விளக்கமளித்துகொண்டுள்ளார்.

சந்தர்ப்பம் சூழ்நிலைகளுக்கும் அப்பால் இப்படியான வார்த்தை பிரயோகங்களை அவர் பயன்படுத்தியது மிகவும் தவறானது என்றும் அந்த வகையில் அவரிடம் சில விடயங்கள் தொடர்பில் கட்சியினால் விளக்கம் கோரப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
மேலதிக தகவல்கள் விரைவில் .