கிளிநொச்சி மாவீரர் இல்லம் இராணுவத்தினரின் உதவியுடன் அபகரிக்க முயற்சி!

theravil
theravil

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தை தனிநபர் ஒருவர் அபகரிக்க முயற்சித்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வித அனுமதிகளும், ஆவணங்களும் இன்றி இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த காணி துப்பரவு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமது உறவுகளை அஞ்சலி செலுத்தும் இடத்தினை மாற்றார் கைப்பற்றுவதனை அனுமதிக்க முடியாது.

எனவே இது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் தீர்க்கமான முடிவினை தருமாறும் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு நிருவாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.