மதங்களுக்கிடையில் சகவாழ்வு வேண்டும்

3 yht
3 yht

தேசிய ஒற்றுமை மற்றும் மதங்களுக்கிடையிலான சகவாழ்வு என்பன வெறும் வார்த்தைகளில் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் நடைமுறையிலும் இடம்பெறவேண்டும். மதங்களுக்கிடையிலான சகவாழ்வு உள்ள ஒரு நாடே பாதுகாப்பான நாடாகும் என நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பல்வேறு தரப்பினரும் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் தவறான சிந்தனையை விதைத்தனர். எனினும் தற்போது முஸ்லிம் மக்கள் அவருடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.