தமக்கு ஒரு விளையாட்டு மைதானம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மன்னார் கருங்கண்டல் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மடு கல்வி வலயத்திற்குற்பட்ட கருங்கண்டல் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று(13) காலை 7.30 மணியளவில் விளையாட்டு மைதானத்திற்கு முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த மைதானப்பகுதியில் கட்டிடம் கட்டும் நடவடிக்கை இடம் பெற உள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்தும், மைதானத்தை பாதுகாக்க கோரியும் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
இதன் போது மடு வலயக்கல்விப்பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர் தனித்தனியாக தமது கோரிக்கை அடங்கிய மகஜரை வலயக்கல்விப் பணிப்பாளரிடம் கையளித்தனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அவர் மாணவர்களுக்கு உறுதியளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.