மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்கம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(13) நண்பகல் 12.45 மணியளவில் வீதியை விட்டு விலகி தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது .
அதில் பயணஞ் செய்த இருவர் காயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து முச்சக்கரவண்டி செலுத்த பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். .