லயன் எயார் விமானத்திலிருந்து மேலுமொரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் நிலைமையும் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
70 வயதான இந்தோனேஷியாவை சேர்ந்த முதியவர் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விமானத்தில் உயிரிழந்த 2 பயணிகளின் சடலங்களும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.