காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமில் தீ விபத்து

images 10
images 10

களுத்துறை-கட்டுகுருந்த காவல்துறையின் விசேட அதிரடிப்படை முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

காவல்துறையின் விசேட அதிரடிப் படையினர் தங்கியிருக்கும் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினரின் உதவியோடு மேற்படி தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த தீ விபத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதோடு, மின் கசிவு காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.