ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பயணம்

ranil 1
ranil 1

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (13) சிங்கப்பூரிற்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அவர் நாளை (15) மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி குறித்து கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நாளை மறுதினம் (16) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.