ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (14) காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.
இவர்கள் இன்று காலை 6.35 மணியளவில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் மூலம் 42 பேர் அடங்கிய தூதுகுழு அதிகாரிகளுடன் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா, விஞ்ஞான தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.