ரஞ்சன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகளில் தமிழ் எம்.பி.க்கள் இல்லையா ?

1 dr
1 dr

தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு தலையீடு செய்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளமையே அவரை கைது செய்வதற்கான குற்றச்சாட்டாக அமைந்துந்திருந்தது.

கடந்த 14 ஆம் நாள் கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க தற்போதுவரை தடுப்புக்காவலில் இருக்கின்றார் .

அவர் உணவை மறு த்தல் மற்றும் இதர சில விடயங்களுக்கு மறுப்பு வெளியிட்டுள்ள போதிலும் தற்போது முக்கிய விடயம் ஒன்று அரசியல் வட்டாரங்களில் பரவி உள்ளது .

அரசியலமைப்பின் 111 ஆவது சரத்தின் கீழ், நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவிக்கப்பட்டும் உள்ளது.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறான குற்றச்சாட்டுகளின் கீழ் நபரொருவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை முக்கிய விடயமாக உள்ளது.


இந்த நிலையில் தற்போது தமிழ் அரசியல் வாதிகள் சிலரின் ஒலிப்பதிவுகளும் ரஞ்சன் ராமநாயக்கவிடம் சிக்கி இருக்குமோ என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .