சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று (17) அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு வருகை தந்திருந்தார்.
அங்கு இடம்பெற்றுவரும் காகித உற்பத்தி, மரக்கறி எண்ணெய் உற்பத்தி ஆகிய உற்பத்தி நிலையங்களை பார்வையிட்டார்.
இதன்போது கைத்தொழில் பேட்டையில் பணிபுரிவோர் தொழிற்சாலையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.