கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் வெடி பொருட்கள் மீட்பு

IMG 20200118 WA0002
IMG 20200118 WA0002

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்திலிருந்து நேற்றிரவு (17) டைனமைட் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாங்குளம் நேரியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் பேருந்தில் உரிமை கோரப்படாமலிருந்த பயண பொதியொன்றிலிருந்து 51 டைனமைட் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் செட்டிக்குளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.