குத்துச்சண்டை வீரர்களுக்கு ஆசி வேண்டி வவுனியாவில் விசேட பூஜை நிகழ்வு!!

IMG20200118084846
IMG20200118084846

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 7 வீரர்களுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது.

எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டிக்கு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆசி வேண்டி இன்றைய தினம் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வட மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும் கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் மற்றும் வீரர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பூஜை நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவரும், சமூக சேவையாளருமான க.சந்திரகுமார் கண்னன் கலந்துகொண்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.