2020ம் ஆண்டுக்கான கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

IMG 5930
IMG 5930

2020 ஆண்டு மாவட்ட ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி முன்னேடுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (18) இடம்பெற்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் ஏற்பாட்டில் நேசக்கரம் பிரஜைகள் குழுவின் தலைவர் பி.எஸ்.அன்ரன் தலைமையில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட காரியாலயத்தில் இடம்பெற்றது

இக் கலந்துரையாடலில் கிராம ரீதியாக இயங்கி வரும் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் நேசக்கரம் பிரஜைகள் குழு அங்கத்தவர்கள் ஊடாக 2020ல் மேற்கொள்ளப்பட உள்ள கிராம, பிரதேச மட்ட செயற்பாடுகள், உள்ளக அபிவிருத்தி, சமூக சேவை செயற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது

அத்துடன் கிராம மட்டத்தில் நிலவுகின்ற உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான குறைபாடுகளை இனம் கண்டு அவற்றை உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கும் பொது கலந்துரையாடல் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது

குறித்த கலந்துரையாடலில் சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், பள்ளிமுனை பகுதிகளை சேர்ந்த பெண்கள், நேசக்கரம் பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள், வடமாகண கடற்தொழிலாளர், இணையத்தின் செயளாலர் மற்றும் மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அதிகாரி மேரி பிரியந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.