யாழில் உள்ள கடற்றொழில் உபகரணங்கள் விற்பனை நிலையத்திலிருந்து சுமார் 360 கிலோ எடையுடைய தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்.விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் இன்றைய தினம் (18) திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் போது ஒரு கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 30 கிலோ தங்கூசி வலையும் மற்றைய கடையில் இருந்து சுமார் 330 கிலோ தங்கூசி வலையும் மீட்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து கடை உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட வலைகளையும், கடை உரிமையாளர் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.