15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி!

1 ert
1 ert

அரச பாடசாலைகளில் காணப்படும் 60 ஆயிரம் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களில் 15 ஆயிரம் பேர் பயிற்றப்படாதவர்கள் என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

விகிதாசார ரீதியில் இந்த எண்ணிக்கை 25 வீதமாகும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களில் வட மாகாணத்தில் மாத்திரம் விகிதாசார ரீதியில் 55 வீதம் பயிற்றப்படாதவர்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மிக மோசமான ஒரு நிலைமை எனவும், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வந்து இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.