இந்தியா-அவுஸ்ரேலிய அணிகள் இடையிலான தொடரினை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று (19) நடைபெற உள்ளது.
தொடரின் முதலிரு போட்டிகளில் அவுஸ்ரேலியா, இந்தியா தலா ஒரு வெற்றியினை பெற்றுள்ளது.
கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் 2-3 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை இழந்த இந்திய அணி அதற்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.