கூட்டுத்தலைமையே இன்றைய தேவை – ரெலோ உறுப்பினர் தெரிவிப்பு

Press meet 1
Press meet 1

கூட்டுத்தலைமையின் அடிப்படையில் இணைந்து செயற்படுவதே தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.

தமிழ்க்குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றுத்தலைமை என தெரிவித்து ஒரு கட்சியிலிருந்து பிரிந்து செல்வது சாதகமாக அமையாது. தனித்தலைமையை பொறுத்த மட்டில் காத்திரமான தலைமையாக அமையுமா என்பது சந்தேகம். மாற்றுத்தலைமை என்பது கூட்டுத்தலைமைக்கு தயாரில்லாத நிலையில் காணப்படுகிறது. பூகோள அரசியலைப் பொறுத்த மட்டில் கூட்டுத்தலைமை தான் எல்லா நாடுகளிலும் ஆட்சி செய்கிறது.

எனவே தமிழர்களைப் பொறுத்த மட்டில் அரசியல் பலமிருக்க வேண்டுமாயின் கூட்டு அரசியல் பலத்தினூடாகவே அதனை அடைந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

சபா.குகதாஸ் அவர்கள் தமிழ்க்குரலுக்கு வழங்கிய நேர்காணலின் முழுமையான காணொளி வடிவம் உங்கள் பார்வைக்கு