கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் தலைவராக ஜனார்த்தனன் பதவியேற்பு

2 n 1
2 n 1

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் தலைவராக இன்று (20 ) ஜனார்த்தனன் பதவியேற்றுள்ளார்.

தேவையுடையவர்களுக்கு தேவையான சேவையும் உதவிகளும் செய்யக் காத்திருக்கிறோம் என்றும் .

தன்னால் முடிந்த முன்னேற்றமான நடவடிக்கைகளை தமது மக்களுக்கு செய்வதற்கு மீண்டும் ஒருவாய்ப்பாக இதனை கருதுவதோடு நலிவடைந்த பிரதேசங்களுக்கான நடவடிக்கைககளுக்கு அன்பான ஆர்வலர்களின் தரமான ஆலோசனைகளையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

வீடமைப்பு அதிகாரசபைக்குட்பட்ட விடயங்கள் மாத்திரமன்றி பொதுவான பிரச்சினைகளையும் தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் .

ஏலவே வழங்கி தன்னால் செய்யப்படாமல் இருக்கும் ஒருசில வாக்குறுதிகளையும் நிறைவேற்றி கொடுக்க ஆர்வமாக இருக்கிறேன் எனவும் . மக்கள் பணியில் ஆர்வமுள்ளவர்களை அன்போடு அழைத்து .

வாருங்கள் எமது மாவட்ட மக்களுக்கு முடியுமான சேவையாற்றுவோம்.என தனது முகநூல் பதிவில் ஜெ .ஜனார்த்தனன் குறிப்பிட்டுள்ளார் .

இவர் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்பது குறிப்பிட தக்கது .