சென் ஜோசப் முத்தரிப்புத்துரை அணி சம்பியனாக தெரிவு

DSC00014
DSC00014

மன்னார் ‘டைமன் ஸ்டார்’ விளையாட்டுக் கழகத்தின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் சென் ஜோசப் முத்தரிப்புத்துரை அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களாக நானாட்டான் பிரதேச பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இப் போட்டியில் சுமார் 40 அணிகள் பங்கு பற்றின.

நேற்று (19) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென் ஜோசப் முத்தரிப்புத்துரை அணியும், சென் சேவியர் தேவன்பிட்டி ஆகிய இரு அணிகளும் பல்பரீட்சை நடத்தியது.

இதில் 4-3 என்ற கோல் கணக்கில் சென் ஜோசப் முத்தரிப்புத்துரை அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்கள், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் நானாட்டான் பிரதேச செயலாளர், நானாட்டான் பங்குத்தந்தை, டைமண்ட் ஸ்டார் விளையாட்டு கழக வீரர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.