நெல் கொள்முதல் விலை நிர்ணயம் விரைவில் பெற்றுத்தரப்படும் – காதர் மஸ்தான்

IMG 5870
IMG 5870

விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதலுக்கான நிர்ணய விலை தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

பூமலர்ந்தான் பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற வெள்ளப்பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு அவற்றில் பாதிக்கப்பட்டு அழிவடைந்த நெற்செய்கைகளுக்கான நட்டஈடு வழங்குவதற்கான பணிகள் விரைவில் நடைபெறவுள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை

தற்போது நெல் கொள்முதல் தொடர்பாக விலை நிர்ணயம் செய்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதில் மக்களின் முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சம்மந்தப்பட்ட அமைச்சருடன் பேசி நெல்களை விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாத வகையில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை செய்து தரப்படும்.

அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட விலையை உறுதிசெய்து தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இதன் போது தெரிவித்தார்