கல்முனை மாநகர பொதுச் சந்தை புனரமைக்குமாறு பணிப்பு

2 5
2 5

40 வருட பழமை வாய்ந்த கல்முனை மாநகர பொதுச் சந்தையில் சில பகுதிகளை அவசரமாக புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

அவசரமாக புனரமைப்பு செய்ய வேண்டிய சந்தையின் சில பகுதிகளை மாநகர ஆணையாளர் அடையாளப்படுத்தி அதற்கான அறிவுறுத்தல்களையும் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

அதற்கமைய குறித்த சந்தையின் சில பகுதிகளின் கூரைகள் திருத்தி அமைக்கப்பட்டு, சில பகுதிகளில் கட்டுமானங்கள் அகற்றப்பட்டு புதிய கடைகள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் சேதமடைந்து காணப்படும் உள்ளக வடிகாண்களும் புனரமைப்பு செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது

இந்த திருத்த வேலைகளுக்கான மதிப்பீடுகளை உடனடியாக மேற்கொண்டும் அடுத்த இரு வாரங்களில் பணிகளை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாநகர முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.