விமல் வீரவன்சவின் உத்தரவு – பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு பின்னடைவு

mannar
mannar

மன்னார் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகையில் முதல் வரியில் இருந்த தமிழ் மொழி அமைச்சர் விமல் வீரவன்சவின் பணிப்புரைக்கமைய இரண்டாம் வரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச, தலைமன்னாரில் நேற்றுமுன்தினம் (19) பனந்தும்பு உற்பத்தி நிலையத்தினைத் திறந்து வைத்தார்.

இதனை தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து பேரினவாதிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதனை அடுத்து பெயர்ப் பலகையின் முதல் வரியில் காணப்பட்ட தமிழ் மொழி நேற்றைய தினம் (20) மாற்றப்பட்டுள்ளது.

சிங்கள மொழி முதல் வரியிலும் தமிழ் மொழி இரண்டாம் வரியிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர்ப்பலகையினையும் தனது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.