காணாமல்போன தன் பிள்ளையை 10 வருடங்களாக தேடி அலைந்த நிலையில் தாய் ஒருவா் உயிரிழந்தார்.
கிளிநொச்சி மருதநகர் பகுதியை சேர்ந்த 77 வயதான சின்னையா கண்ணம்மா என்பவரே இவ்வாறு மகனை தேடிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
23 வயதான தனது கடைசி மகன் சின்னையா பிரசாந் என்பவரை பல போராட்டங்களிலும், விசாரணைகளிலும் தேடி அலைந்துள்ளார்.
அவரின் கணவர் இறந்து ஒரு வருடங்கள் ஆகாத நிலையில், தாய் கண்ணம்மாவின் மறைவும் குடும்பத்தை மாத்திரமல்ல அப் பிரதேசத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.